போலீஸ்காரர் மீது தாக்குதல்: திருச்சியில் பரபரப்பு

 

திருச்சி, ஏப். 10: திருச்சி பீமநகர் மார்சிங் பேட்டை போலீஸ் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (35). இவர் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஜீப் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஸ்ரீரங்கம் கிரைம் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர் .

அப்போது திருவானைக்காவல் பொன்னுரங்கபுரம் வாய்க்கால் கரை அருகே சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பல் மது அருந்தி கொண்டிருந்தனர். இதைப்பார்த்த சரவணக்குமார் அவர்களை பிடிக்க முயன்ற போது அந்த கும்பல் போலீஸ்காரர் சரவணக்குமாரை தாக்கினர். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணன், சுப்பிரமணியன், பிரபு, கார்த்திக் மற்றும் சிலர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post போலீஸ்காரர் மீது தாக்குதல்: திருச்சியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: