செந்துறை அருகே சோளத்தட்டை தீயிட்டு கொளுத்தியதில் தீக்காயமடைந்த மூதாட்டி பலி

 

அரியலூர், ஏப் 10:அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே மக்காச்சோளத் தட்டையை தீயிட்டு கொளுத்தியதில் தீக்காயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். செந்துறை அருகேயுள்ள நல்லநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழமலை மனைவி பட்டம்மாள்(75). நேற்று இவர், தனக்கு சொந்தமான வயலில் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத் தட்டைகளை தீயிட்டுக் கொளுத்திக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தீ பட்டம்மாள் மீது பற்றிக் கொண்டது. இதில் பலத்த தீக்காயமடைந்த பட்டம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து செந்துறை காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post செந்துறை அருகே சோளத்தட்டை தீயிட்டு கொளுத்தியதில் தீக்காயமடைந்த மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Related Stories: