பதற்றமான வாக்குச்சாவடிகளில் 158 நுண் பார்வையாளர்கள் நியமனம் திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளில்

திருவண்ணாமலை, ஏப்.10: திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 158 நுண் பர்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதையொட்டி, கணினி குலுக்கல் மூலம் அவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளை கண்காணிக்க, நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, திருவண்ணாமலை தொகுதிக்கு 87 பேரும், ஆரணி தொகுதிக்கு 71 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதையொட்டி, நுண் பார்வையாளர்களுக்கான பணி ஒதுக்கீடு நேற்று கணினி குலுக்கல் மூலம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன், தேர்தல் பொது பார்வையாளர் மகாவீர்பிரசாத் மீனா ஆகியோர் முன்னிலையில், பணி ஒதுக்கீடு நடந்தது. மேலும், நுண் பார்வையாளர்களுக்கு நாளை மறுதினம் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளன. இதில், பதற்றமான, அதிக பதற்றமான வாக்குச்சாவடிகளில் நுண் பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

The post பதற்றமான வாக்குச்சாவடிகளில் 158 நுண் பார்வையாளர்கள் நியமனம் திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளில் appeared first on Dinakaran.

Related Stories: