கஞ்சா சப்ளை செய்த லாரி டிரைவர் கைது

சேலம், ஏப்.10: சேலம் மாவட்டம், மேச்சேரி பகுதியில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக சேலம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதன்பேரில், பச்சாபாளி பகுதியைச் சேர்ந்த இளங்கோவன்(35), சேட்டு(34) ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், எம்.காளிப்பட்டி குப்பைமேடு அருகில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, 68 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய போலீசார், 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், கஞ்சாவை சப்ளை செய்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் மணப்பாறையை சேர்ந்த லாரி டிரைவர் ராசு(37), லாரியில் கஞ்சாவை சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அவரை கைது செய்து சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கஞ்சா சப்ளை செய்த லாரி டிரைவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: