கோவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கணபதி பாளையம், பொன் நகர், அவர பாளையம் ஆகிய பகுதிகளில் அமைச்சர் சாமிநாதனுடன் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்காளர்கள் மத்தியில் அவர் பேசுகையில்; I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெற்றால் ஜி.எஸ்.டி. வரிகள் நீக்கப்படும். நமது கோவை பழைய கோவையாக மாறும். தொழிற்சாலைகள் விசைத்தறி தொழில் அனைத்தும் சிறப்பாக மாற உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்தார்.
The post நம்ம கோவை பழைய கோவையாக மாற I.N.D.I.A. கூட்டணிக்கு வாக்களியுங்கள்: கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வாக்குசேகரிப்பு appeared first on Dinakaran.