சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை: சென்னையில் இருந்து நெல்லைக்கு ஏப். 12, 19, 26 மற்றும் மே 10,17,24,31 ல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 7.10 க்கு நெல்லை சென்று சேரும். நெல்லையில் இருந்து சென்னைக்கு ஏப். 11, 18,25 மற்றும் மே மாதத்தில் 9, 16, 23, 30 தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். நெல்லையில் மாலை 6.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.30 க்கு சென்னை எழும்பூர் வந்து சேரும். கோவில்பட்டி, சிவகங்கை, பட்டுக்கோட்டை, திருவாரூர், சீர்காழி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

 

The post சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: