நீலகிரி திமுக வேட்பாளர் ஆர்.ராசாவுக்கு நூதன பரிசு: மாலை அணிந்த ஆடு, 420 என்ற எண் கொண்ட காசோலையை பரிசாக அளித்த மக்கள்

உதகை: நீலகிரியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் ஆர்.ராசாவுக்கு 2019ல் மோடி அளித்த வாக்குறுதியை குறிக்கும் வகையில் 420 என்ற எண் கொண்ட காசோலையில் 15 லட்சம் ரூபாய் என்று எழுதி மக்கள் பரிசளித்தனர். அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனை படுகையின மக்கள் நடனமாடி வரவேற்றனர். நீலகிரி மக்களவை தொகுதிக்குட்பட்ட புஞ்சைபுளியம்பட்டியில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் ஆர்.ராசாவை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

2019ம் ஆண்டு மோடி அளித்த வாக்குறுதியை நினைவு படுத்தும் வகையில் 420 என்ற எண் கொண்ட காசோலையில் ரூ.15 லட்சம் என்று எழுதி 56கிங்ஸ் என்ற கையெழுத்துடன் பரிசாக அளித்தனர். அத்துடன் மாலையிடப்பட்ட ஆடு ஒன்றையும், மாலை அணிவிக்கப்பட்ட கேஸ் சிலிண்டரில் சுட்டது சதி மட்டுமல்ல கேஸ் விலையும் தான் என்ற வாசகமும் ஒட்டப்பட்டிருந்தது. நல்லூர் கிராமத்தில் வேலை இல்லை என்ற பதாகையும் ஏந்தி கோட்ஷூட் அணிந்த இளைஞர்கள் வடை சுட்டு கொண்டிருந்தனர்.

அப்போது வாக்கு சேகரித்து கொண்டிருந்த ஆர்.ராசா அவர்களுடன் வடை சுட்டு இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் வழங்கி இது மோடி வடை என்று கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். உதகை அருகே முந்தலா என்ற கிராமத்தில் வாக்கு சேகரிக்க சென்ற நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனை படுகர் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து நடனமாடி வரவேற்றனர். அப்போது கிராம பெரியவர்களின் கால்களில் விழுந்து லோகேஷ் தமிழ்செல்வன் ஆசீர்வாதம் பெற்றார். தொடர்ந்து தங்காடு, மஞ்சூர் ஆகிய மலை கிராமங்களிளும் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

The post நீலகிரி திமுக வேட்பாளர் ஆர்.ராசாவுக்கு நூதன பரிசு: மாலை அணிந்த ஆடு, 420 என்ற எண் கொண்ட காசோலையை பரிசாக அளித்த மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: