முசிறி அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

 

முசிறி, ஏப்.7: முசிறி அருகே எம்.புதுப்பட்டி ஊராட்சி தெற்கு சொரியம் பட்டியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (19). இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டிற்கு வந்தவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனை அவரது தாயார் தனம் கண்டித்துள்ளார். இதனால் நேற்று காலை அவரது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

அருகில் இருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பலியானார். இதுகுறித்து முசிறி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post முசிறி அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: