முன்னாள் ராணுவ வீரர்கள், ஓய்வு போலீசாருக்கு அழைப்பு

 

சேலம், ஏப்.7: சேலம் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட முன்னாள் ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற போலீசார் பதிவு செய்யும் படி மாவட்ட எஸ்பி கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது, வாக்குச்சாவடி பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற போலீசாரை ஈடுபடுத்தவுள்ளனர். இதற்காக அந்தந்த மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள், ஓய்வு போலீசாரை பணிக்காக சேர்த்து வருகின்றனர்.

சேலம் மாநகர், மாவட்டத்திலும் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேலம் மாவட்ட எஸ்பி அருண்கபிலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறையினர் தேர்தல் பணிக்கு அழைக்கப்படுகிறார்கள்.

அதனால் விரும்பம் உள்ளவர்கள், சேலம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேரிலோ அல்லது 94981-67235, 94981-67684 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவோ தொடர்பு கொண்டு தங்களுடைய விருப்பத்தை வரும் 10ம் தேதிக்குள் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post முன்னாள் ராணுவ வீரர்கள், ஓய்வு போலீசாருக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: