வெடிகுண்டு கண்டறியும் கருவி மூலம் தீவிர சோதனை

கோத்தகிரி, ஏப்.7: வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் அறிவுறுத்தலின் படி தேர்தல் பாதுகாப்பு வலுப்படுத்தும் வகையில் கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை கருத்தில் கொண்டு பொது இடங்கள் மற்றும் பொது இடங்களில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள், சந்தேகத்துக்குரிய நபர்கள், அதிகம் மக்கள் கூடும் இடங்கள் மற்றும் உள்ளூர், வெளியூர் வாகனங்களை தேர்தல் தனிப்படை அமைத்து வெடிகுண்டு கண்டறியும் கருவி மூலம் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வெடிகுண்டு கண்டறியும் கருவி மூலம் தீவிர சோதனை appeared first on Dinakaran.

Related Stories: