கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது

கோவை, ஏப். 7: கோவை ஆவாரம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (58). இவர் கல்லூரி விடுதியில் வார்டனாக உள்ளார். இரவு ஜெயச்சந்திரன் விடுதி வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கே வந்த கல்லூரியின் முன்னாள் மாணவர்களான வால்பாறையை சேர்ந்த கீர்த்திக் (22), குன்னுரை சேர்ந்த கௌதம் (22), ஹரி (22) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து ஜெயச்சந்திரனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து கீர்த்திக், கௌதம் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

The post கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: