வெவ்வேறு இடங்களில் சம்பவம்: ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உள்பட 2 பேர் பரிதாப சாவு

ேகடிசிநகர், ஏப்.7: பாளை என்ஜிஓ ஏ காலனி ஜெயம் காலனியை சேர்ந்தவர் செல்வராஜ்(80). இவர் சென்னையில் அரசு கருவூலகத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். செல்வராஜ், காய்கறிகள் வாங்குவதற்காக அருகில் உள்ள சந்தைக்கு சைக்கிளில் சென்றார். ஜெபா கார்டன் அருகில் சென்றபோது அந்த வழியாக சென்ற கார், சைக்கிள் மீது மோதியது. இதில் செல்வராஜ், தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் அருகேயுள்ள காசிதர்மத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து(65) விவசாய கூலி தொழிலாளி. இவர் தோட்டத்திற்கு சென்ற நிலையில் மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இசக்கிமுத்து, காட்டுப்பன்றி தாக்கியதில் மயங்கி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து அச்சன்
புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வெவ்வேறு இடங்களில் சம்பவம்: ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உள்பட 2 பேர் பரிதாப சாவு appeared first on Dinakaran.

Related Stories: