இதனிடையே 15 மாநிலங்களை சேர்ந்த 56 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய கடந்த பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் குஜராத்தில் இருந்து நட்டா வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் குஜராத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.பி.நட்டா நேற்று மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றார்.
அவரை தொடர்ந்து மகாராஷ்டிராவில் இருந்து அசோக்ராவ் சங்கர்ராவ் சவான், ராஜஸ்தானில் இருந்து சுன்னிலால் கராசியா, தெலங்கானாவில் இருந்து அனில் குமார் யாதவ் மண்டாடி மற்றும் மேற்குவங்கத்தில் இருந்து சுஷ்மிதா தேவ், முகமது நதிமுல் ஹக் ஆகிய 5 பேரும் மாநிலங்களவை உறுப்பினராக நேற்று பதவி ஏற்றனர்.
The post மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றார் ஜே.பி நட்டா: மேலும் 5 பேர் பதவி ஏற்றனர் appeared first on Dinakaran.