இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக போதிய அளவு மின்சாரம் இல்லை என்று தெரிகிறது. மேலும் குறைந்த மின் அழுத்தம் காரணமா அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதன்காரணமாக வயல்களுக்கு முறையாக தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் அனைத்தும் கருகி விடுகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை, விரக்தியில் உள்ளனர்.
இதுகுறித்து ஊராட்சிமன்ற தலைவர் விஜயன், ஊத்துக்கோட்டை மின்சார வாரிய அலுவலகத்துக்கு சென்று கேட்டபோதும் சரியான பதில் இல்லை என்று தெரிகிறது. எனவே மாளந்தூர் கிராமத்துக்கு சீரான மின்சாரம் விநியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post ஊத்துக்கோட்டை அருகே மாளந்தூர் கிராமத்தில் தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகுவதால் வேதனை appeared first on Dinakaran.