தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள புதிய திட்டத்தின் படி 101 வயதுடைய ராமக்காள் இன்று முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எளிதாக தங்கள் இல்லத்திலேயே தபாலில் வாக்களிக்கும் முறையில் தேர்தல் அதிகாரிகள் மூலம் தனது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்ட வாக்குப்பெட்டியில் தன்னுடைய வாக்கை அதற்கென கொண்டுவரப்பட்ட பெட்டியில் செலுத்தினார். 101 வயதில் தன்னுடைய ஜனநாயக கடமை ஆற்றிய ராமக்காளுக்கு தேர்தல் அலுவலர் முரளி, மைக்ரோ அப்சர்வர் ஏழுமலை, உதவி மண்டல அலுவலர் சரவணன் உள்ளிட்ட தேர்தல் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
The post காவேரிப்பட்டினம் அருகே தபால் வாக்களித்த 101-வயது மூதாட்டி appeared first on Dinakaran.