விழுப்புரம் மாவட்டத்தில் திமுகவை வலுப்பெற வைத்ததில் புகழேந்தி முக்கிய பங்காற்றினார்: விசிக எம்.பி. ரவிக்குமார் இரங்கல்..!!

சென்னை: திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்:

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி (69) உடல்நலக் குறைவால் காலமானார். விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புகழேந்தியின் உயிர் பிரிந்தது. விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.வான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். மறைந்த சட்டமன்ற உறுப்பினரான புகழேந்தி திமுகவின் மூத்த நிர்வாகி ஆவார். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன் கூடியுள்ள திமுக தொண்டர்கள் கண்ணீர் சிந்தி வருகின்றனர்.

திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு விசிக இரங்கல்:

திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் திமுகவை வலுப்பெற வைத்ததில் புகழேந்தி முக்கிய பங்காற்றினார். எல்லோருடனும் அன்பாக பழகக் கூடியவர், கண்ணியமான அணுகுமுறையைக் கொண்டவர். எம்.எல்.ஏ. புகழேந்தியின் மறைவு திமுகவுக்கு பேரிழப்பு ஆகும் என்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

புகழேந்தி உடலுக்கு அமைச்சர் பொன்முடி அஞ்சலி:

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் திமுக எம்.எல்.ஏ.புகழேந்தி உடலுக்கு அமைச்சர் பொன்முடி அஞ்சலி செலுத்தியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி குடும்பத்தினருக்கு அமைச்சர் பொன்முடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

The post விழுப்புரம் மாவட்டத்தில் திமுகவை வலுப்பெற வைத்ததில் புகழேந்தி முக்கிய பங்காற்றினார்: விசிக எம்.பி. ரவிக்குமார் இரங்கல்..!! appeared first on Dinakaran.

Related Stories: