பாலக்காடு, ஆலத்தூர் தொகுதிகளில் 16 வேட்பு மனுக்கள் ஏற்பு 8 மனுக்கள் தள்ளுபடி

பாலக்காடு, ஏப்.6: பாலக்காடு மாவட்ட கலெக்டர் மாநாட்டு அரங்கில் இரண்டு தொகுதி வேட்பாளர்களின் வேட்பு மனு பரிசீலனை மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ்.சித்ரா, ஏடிஎம் பிஜூ ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது. மொத்தம் 24 வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் 8 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடியானது. பாலக்காடு, ஆலத்தூர் (தனி) ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளிலாக மொத்தம் 16 பேர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் வாபஸ் பெறக்கூடிய கடைசி தேதி ஏப் 8ம் தேதி. அன்றைய தினம் கட்சி வேட்பாளர்களின் சின்னங்கள் வெளியிடப்படும். வரும் ஏப் 26ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான டாக்டர். எஸ். சித்ரா அறிவித்தார்.

The post பாலக்காடு, ஆலத்தூர் தொகுதிகளில் 16 வேட்பு மனுக்கள் ஏற்பு 8 மனுக்கள் தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: