சென்னை: சென்னைக்கு நகை வாங்க வந்ததாக கூறப்படும், ஆந்திர மாநில நபரிடம் ரூ.15.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த கோலி வெங்கட சத்யநாராயணன் புவனேஷ்வர் ரயிலில் சென்னை வந்துள்ளார். ஆந்திர நபர் அணிந்திருந்த சட்டை, இடுப்பில் கட்டப்பட்ட துணியில் கட்டு கட்டாக ரூ.500 நோட்டுகள் இருந்துள்ளன.