இந்தியாவிற்கு கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்க மாட்டோம்: இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி

கொழும்பு: இந்தியாவிற்கு கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்க மாட்டோம் என இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஒப்பந்தம் மூலம் பெற்ற கச்சத்தீவை இந்தியாவிற்கு திரும்ப வழங்குவது சாத்தியமற்றது. கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல் வளம் முற்றிலும் சூறையாடப்படும். கச்சத்தீவு விவகாரத்தில் 50 ஆண்டுக்கு முன்பே பேசி தீர்வு காணப்பட்டுவிட்டது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தெரிவித்திருக்கிறார்.

The post இந்தியாவிற்கு கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்க மாட்டோம்: இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி appeared first on Dinakaran.

Related Stories: