முத்துப்பேட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

 

முத்துப்பேட்டை, ஏப். 5: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு திடலில் தமுமுக சார்பில் தமுமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தமுமுக மக்கள் உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அணி மாநில செயலாளர் வழக்கறிஞர் தீன் முகமது தலைமையில் நடைபெற்றது. நகர தலைவர் அலீம், துணைத்தலைவர் மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் டிஎஸ்பி ராஜா, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி, அல்மஹா அறக்கட்டளை நிறுவனர் ஹைதர் அலி, கவிஞர் பசீர் அகமது, விசிக மாவட்ட செயலாளர் வெற்றி, வர்த்தகக்கழக தலைவர் கண்ணன், கம்யூனிஸ்ட் நகர செயலாளர் மார்க்ஸ், மார்க்சிஸ்ட் நகர செயலாளர் செல்லத்துரை, விஸ்வகர்மா சங்க தலைவர் ராஜசேகர் உட்பட பலரும் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி பேசினார்கள்.

இந்த இப்தார் நிகழ்ச்சியில் அனைத்து மத நல்லிணக்க சங்கத்தினர் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் அரசுத்துறை அதிகாரிகள் பேரூராட்சி தலைவர். துணைத் தலைவர் உறுப்பினர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் ரோட்டரிச் சங்கம், லயன் சங்கம், வர்த்தக கழகம், வர்த்தக சங்கம், அனைத்து ஜமாத் இளைஞர்கள் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த பிரதிநிதிகள், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நோன்பு திறந்தனர்.

The post முத்துப்பேட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: