கராத்தே மாணவர்களுக்கு பட்டய சான்றிதழ் வழங்கல்

கோவில்பட்டி, ஏப். 5: கோவில்பட்டி கஸ்தூரிபா நர்சரி பிரைமரி பள்ளியில் கராத்தே மாணவர்களுக்கு தகுதி பட்டய சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் சரஸ்வதி சுபா தலைமை வகித்தார். வேல்ஸ் வித்யாலயா மற்றும் பல்வேறு தனியார் பள்ளிகளைச் சேர்ந்த கராத்தே மாணவர்கள் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் நகர செயலாளர் சீனிவாசன் பங்கேற்று, கராத்தே மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். காசி மாரியப்பன் நன்றி கூறினார்.

The post கராத்தே மாணவர்களுக்கு பட்டய சான்றிதழ் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: