அதன்படி கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள மொத்த 300 வாக்குச்சாவடி மையங்களுக்கு 396 வாக்குப் பதிவு இயந்திரங்களும், பொன்னேரி சட்டமன்ற (தனி) தொகுதியில் உள்ள மொத்த 311 வாக்குச்சாவடி மையங்களுக்கு 373 வாக்குப் பதிவு இயந்திரங்களும், திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள மொத்த 296 வாக்குச்சாவடி மையங்களுக்கு 355 வாக்குப் பதிவு இயந்திரங்களும், பூந்தமல்லி சட்டமன்ற (தனி) தொகுதியில் உள்ள மொத்த 395 வாக்குச்சாவடி மையங்களுக்கு 475 வாக்குப் பதிவு இயந்திரங்களும், ஆவடி சட்டமன்ற தொகுதியில் உள்ள மொத்த 449 வாக்குச்சாவடி மையங்களுக்கு 541 வாக்குப் பதிவு இயந்திரங்களும், மாதவரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள மொத்த 475 வாக்குச்சாவடி மையங்களுக்கு 574 வாக்குப் பதிவு இயந்திரங்களும் என மொத்தம் 2,256 வாக்குச்சாவடி மையங்களுக்கு 2,714 வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், பயிற்சி கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சத்யாபிரசாத், உதவி ஆணையர் (கலால்) ரங்கராஜன், சென்னை எல்லை சாலை திட்டம் துணை கலெக்டர் பிரியா, தேர்தல் வட்டாட்சியர் சோமசுந்தரம் அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
The post திருவள்ளூர் (தனி) தொகுதியில் உள்ள 2,714 வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2,256 மையங்களுக்கு அனுப்பி வைப்பு: மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல் appeared first on Dinakaran.