இதில், சோனியா மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சுசாந்தா பர்மன் (44) ஆகிய 2 பேரை பிடித்து நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மோகன் புஜக்கர் இங்கு தங்கி வேலை செய்து வந்தநிலையில் சோனியாவிற்கும், சுசாந்தா பர்மன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனால், சோனியாவை காண அவரது வீட்டிற்கு சுசாந்தாபர்மன் அடிக்கடி வந்து சென்றதால் மோகன் புஜக்கர் அவரை கண்டித்துள்ளார். சம்பவத்தன்றும் சுசாந்தா பர்மன் சோனியா வீட்டிற்கு சென்றபோது, அங்கு வந்த மோகன் புஜக்கர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில், ஆத்திரமடைந்த சுசாந்தாபர்மன், தான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மோகன் புஜக்கர் மார்பில் சரமாரியாக குத்தி கொன்றுள்ளார். மேலும், தாங்கள் போலீசில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க, அவர்கள் நாடகமாடியதும் அம்பலமானது. இதையடுத்து, சோனியா மற்றும் சுசாந்தா பர்மன் ஆகிய 2 பேரையும், மாங்காடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இசசம்பவம் மாங்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post மாங்காடு அருகே பரபரப்பு; உறவினரை கொன்று விட்டு நாடகமாடிய வடமாநில கள்ளக்காதல் ஜோடி கைது appeared first on Dinakaran.