விருதுநகர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பிரசாரம் துவக்கம்

 

திருப்பரங்குன்றம், ஏப்.3: விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பிரசாரத்தை துவக்கினார். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடுவதால் இவருக்கு அனைத்து தரப்பினரின் பெருவாரியான ஆதரவு உள்ள நிலையில் நேற்று தனது பிரசாரத்தை விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் துவக்கினார்.

காலையில் எல்பிஎஸ் நகர், கம்மாபட்டி, முத்துராமன்பட்டி, கூத்தாளம்பட்டி, அல்லம்பட்டி, கட்டையாபுரம், பாத்திமாநகர், சுண்ணாம்புகார தெரு, சீதக்காதி தெரு ஆகிய இடங்களிலும், மாலையில் இந்திராநகர், அகமது நகர், வீரசெல்லையாபுரம், அய்யனார் நகர், வெங்கடேசபுரம், நாட்டார் மங்களம், ஆமாத்தூர், மருதுநத்தம், சங்கரலிங்காபுரம் ஆகிய இடங்களிலும் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். சட்டமன்ற உறுப்பினர் ஏஆர்ஆர் சீனிவாசன், திமுக, கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

The post விருதுநகர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பிரசாரம் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: