காரில் கொண்டு சென்ற ரூ.2.50 லட்சம் பறிமுதல்

சிவகங்கை, ஏப்.2: சிவகங்கை அருகே ரூ.2லட்சத்து 50ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை அருகே ரைக்காசு காளியம்மன் கோவில் பகுதியில் நிலையான கண்காணிப்புக்குழு அலுவலர் சரஸ்வதி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காளையார்கோவிலில் இருந்து ஸ்டீபன்தாஸ் என்பவர் வந்த காரை சோதனையிட்ட போது அதில் ரூ.2லட்சத்து 50ஆயிரம் இருந்தது. பணத்திற்கான உரிய ஆவணம் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

The post காரில் கொண்டு சென்ற ரூ.2.50 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: