இந்த நிலையில் மாதத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,455க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.51,640க்கு விற்பனையாகிறது. இந்த ஜெட் வேக விலையேற்றம் நகை வாங்குவோருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திருமணம் உள்ளிட்ட விஷேசங்களுக்காக நகை வாங்க காத்திருப்போருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் இப்படியே தங்கம் விலை உயர்ந்து சவரன் ரூ.55 ஆயிரத்தை தொட்டு விடுமோ? என்ற ஏக்கமும் நகை வாங்குவோர் இடையே நிலவி வருகிறது. தங்கம் விலையை போல் வெள்ளி விலையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 60 காசுகள் உயர்ந்து ரூ.81.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
The post காட்சி பொருளாக மாறும் தங்கம்… சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ரூ.51,640க்கு விற்பனை : ரூ.55,000ஐ தொட்டு விடுமோ? என நகை விரும்பிகள் அச்சம்!! appeared first on Dinakaran.