டெல்லியில் நடைபெறும் விழாவில் ஐந்து பாரத் ரத்னா விருதுகளை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு..!!

டெல்லி: டெல்லியில் நடைபெறும் விழாவில் பாரத் ரத்னா விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்குகிறார். ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் விழாவில் ஐந்து பாரத் ரத்னா விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்குகிறார். எல்.கே. அத்வானி, நரசிம்மராவ், சரண்சிங், எம்.எஸ். சுவாமிநாதன், கற்பூரி தாகூருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது. எல்.கே. அத்வானி தவிர மற்றவர்களுக்கு அவர்களின் மறைவுக்கு பிறகு பாரத் ரத்னா விருது வழங்கப்படுகிறது. பாரத் ரத்னா வழங்கும் விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post டெல்லியில் நடைபெறும் விழாவில் ஐந்து பாரத் ரத்னா விருதுகளை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு..!! appeared first on Dinakaran.

Related Stories: