இந்நிலையில், நேற்று முன்தினம், வேட்புமனு பரிசீலனை முடிந்து, ஓசூருக்கு காரில் சென்ற ஆறுமுகத்தை, 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள், போலுப்பள்ளி கும்மனூர் கூட்ரோடு அருகே வழிமறித்து, சரமாரியாக தாக்கியதுடன், வேட்புமனுவை வாபஸ் பெறாவிட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குருபரப்பள்ளி போலீசார் நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி நகர செயலாளர் அருண்மொழி (28), கட்சியின் உறுப்பினர் கமல்(30), மத்திய மாவட்ட செயலாளர் நரேஷ்குமார்(39) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
The post கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டி வேட்பாளரை தாக்கியதாக நாதக நிர்வாகிகள் 3 பேர் கைது appeared first on Dinakaran.