தேர்தல் பத்திர ஊழல் குறித்து விவாதிக்க வேண்டும். இது மிகப்பெரிய ஊழல் என்று தொடக்கத்தில் இருந்தே கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறி வருகின்றன. தேர்தல் பத்திரம் மூலம் பணம் தேவையில்லை என்று நாங்கள் ஏற்கனவே தெளிவாக கூறியிருந்தோம். தேர்தல் பத்திரம் மூலம் பாஜவுக்குத் தான் பெரும் பணம் கிடைத்துள்ளது. சட்ட ரீதியாக அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதில் எந்த தவறும் கிடையாது. ஆனால் இப்போது நடப்பது அனைத்துமே முறைகேடான நடவடிக்கைகள். தவறு செய்தவர்கள்தான் அமலாக்கத்துறைக்கு பயப்பட வேண்டும். ஒன்றிய அரசைப் பார்த்து போடா என்று சொல்லும் தைரியம் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இருக்கிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post ஒன்றிய அரசை பார்த்து ‘போடா’ என சொல்லும் தைரியம் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு உண்டு: கேரள அமைச்சர் முகம்மது ரியாஸ் பளீர் appeared first on Dinakaran.