விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் விவகாரம் ஒன்றிய அரசு மீது தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் புகார்

புதுடெல்லி: மேற்கு வங்க மாநில அமைச்சர் ஷஷி பாஞ்சா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் நேற்று டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்துக்கு வந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘‘ஒன்றிய அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்றிய அமைப்புகளான அமலாக்கத்துறை, சிபிஐ, என்ஐஏ போன்றவற்றை எதிர்க்கட்சிகளை முடக்கும் ஆயுதங்களாக ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது. இதுகுறித்த கவலையை தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து கூறினோம். அவர்கள் நாளை தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் அளிக்க அனுமதி அளித்துள்ளன ர்’’ என்றார்.

The post விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் விவகாரம் ஒன்றிய அரசு மீது தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் புகார் appeared first on Dinakaran.

Related Stories: