அப்போ வேண்டாம்… இப்போ ரெடியாம்… நடிகை கங்கனாவை எதிர்த்து போட்டியிட நான் தயார்: காங்கிரஸ் மாநில தலைவர் பிரதீபாசிங் அறிவிப்பு

சிம்லா: இமாச்சல் மாநிலம் மண்டி தொகுதியில் பா.ஜ வேட்பாளராக நடிகை கங்கனா ரனாவத் நிறுத்தப்பட்டுள்ளார். இந்த தொகுதியின் தற்போதைய எம்பியாக இருப்பவர் பிரதீபாசிங். இவர் இமாச்சல் மாநில காங்கிரஸ் தலைவர். இமாச்சலில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அங்கு இடைத்தேர்தல் நடப்பதால் அங்கும் பிரசாரம் செய்ய வேண்டும். கள நிலவரம் சரியில்லை எனவே எனக்கு மண்டி தொகுதியில் சீட் வேண்டாம் என்று பிரதீபாசிங் முன்பு தெரிவித்து இருந்தார்.

தற்போது மண்டி தொகுதியில் போட்டியிட தயார் என்று தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில்,’மக்களவைத் தேர்தலில் மண்டி தொகுதியில் போட்டியிட காங்கிரஸின் மத்திய தலைமை எனக்குக் கட்டளையிட்டால், அவர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவேன். நான் எப்போதும் கட்சியின் மேலிடம் என்ன சொல்கிறதோ அதை பின்பற்றுகிறேன். இப்போது அவர்கள் சொல்வதை நான் பின்பற்றுவேன். கட்சி உத்தரவு தான் எனக்கு பெரிய உத்தரவு. அதை எப்போதும் ஏற்று செயல்படுவேன்’ என்று தெரிவித்துள்ளார்.

The post அப்போ வேண்டாம்… இப்போ ரெடியாம்… நடிகை கங்கனாவை எதிர்த்து போட்டியிட நான் தயார்: காங்கிரஸ் மாநில தலைவர் பிரதீபாசிங் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: