கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வாக்களிப்பது தொடர்பான பயிற்சி

ஈரோடு,மார்ச்29: ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு வாக்களிப்பது தொடர்பான பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த தேர்தல்களில் எங்கெல்லாம் வாக்குசதவீதம் குறைவாக இருந்ததோ அந்த பகுதிகளில் எல்லாம் அதிகாரிகள் வீடு வீடாக சென்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி மாணவ, மாணவியர்களான முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு வாக்களிப்பது தொடர்பான பயிற்சி வகுப்புகள் நேற்று மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. ஈரோடு சிஎன் கல்லூரி மற்றும் அரசு கல்லூரிகள் உள்பட மாவட்ட முழுவதும் 30 கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மாதிரி வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு மாதிரி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் இளம் வாக்காளர்கள் 5090 பேர் கலந்து கொண்டு வாக்களித்தனர். மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தவறாது வாக்களிப்போம் என்ற உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனர்.

The post கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வாக்களிப்பது தொடர்பான பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: