2024 டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்..!!

சென்னை: தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு டான்செட் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகங்களில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ படிப்பில் சேர ஆண்டுதோறும் டான்செட் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் நடப்பு 2024ம் ஆண்டில், கடந்த மார்ச் 9ம் தேதி டான்செட் தேர்வு நடைபெற்றது. அதில் எம்சிஏ, எம்பிஏ, எம்டெக், எம்ஆர்க் உள்ளிட்ட முதுநிலை பொறியியல், மேலாண்மை நுழைவுத்தேர்வை 36,139 பேர் எழுதினர்.

இதற்கான இறுதி விடைக்குறிப்பு அண்மையில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, இன்று டான்செட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தேர்வெழுதியவர்கள் https://tancet.annauniv.edu/tancet என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகளை சரிபார்த்துக் கொள்ளலாம். அடுத்ததாக தேர்ச்சி பெற்ற தகுதியானவர்கள், கவுன்சிலிங் செயல்பாட்டிற்கு அழைக்கப்படுவார்கள். மதிப்பெண் சான்றிதழை ஏப்ரல் 3 முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

The post 2024 டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்..!! appeared first on Dinakaran.

Related Stories: