நான்குமுனை போட்டி நிலவும் சூழலில் பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.பி. பாஜவுக்கு தாவல்

புதுடெல்லி: பஞ்சாப்பில் மொத்தமுள்ள 13 மக்களவை தொகுதிகளுக்கு ஜூன் 1ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் ஒரே மக்களவை உறுப்பினராக பொறுப்பு வகித்து வந்த ஜலந்தர் தொகுதி எம்.பி சுஷில் குமார் ரிங்கு நேற்று டெல்லி பாஜ தலைமை அலுவலகத்தில் ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி முன்னிலையில் பாஜவில் இணைந்தார். வரும் மக்களவை தேர்தலில் ஜலந்தர் தொகுதியில் ரிங்குவை களமிறக்க பாஜ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், ஜலந்தர் மேற்கு தொகுதி பேரவை ஆம்ஆத்மி உறுப்பினர் ஷீத்தல் அங்கூரலும் நேற்று பாஜவில் இணைந்தார்.

The post நான்குமுனை போட்டி நிலவும் சூழலில் பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.பி. பாஜவுக்கு தாவல் appeared first on Dinakaran.

Related Stories: