அதிமுக கூட்டணியில் இருந்தாலும் தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என கிருஷ்ணசாமி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதில் இருந்து கிருஷ்ணசாமி தரப்பில் இருந்து உறுதி ஏதும் கொடுக்கப்படவில்லை என தெரிகிறது. நாளை கிருஷ்ணசாமி மனுத்தாக்கல் செய்ய உள்ள நிலையில் இது குறித்து முடிவு செய்ய இன்று மீண்டும் ஆலோசனை நடைபெற உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
The post கிருஷ்ணசாமி ‘இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட நிர்பந்தம்?.. எந்த சின்னத்தில் போட்டி?.. இன்று மீண்டும் ஆலோசனை appeared first on Dinakaran.