நீலகிரி : உதகையின் காப்பி அவுஸ் பகுதியில் இருந்து காலை 10 மணிக்கு பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்ய பாஜகவுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் வேட்பாளர் முருகன் அந்த நேரத்தில் வராததால்,அதிமுக வேட்பாளர் தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மனுதாக்கல் செய்ய தனது ஆதரவாளர்களுடன் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.