மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு

 

ஈரோடு, மார்ச் 25: ஈரோடு மாவட்டத்தில், தேர்தல் விதிமுறை மீறியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகள் மீறுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சென்னிமலை மேளப்பாளையம் புது விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த மக்கள் ஜனநாயக கழக உறுப்பினரான தேவராஜ் (64) என்பவர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை சுவரொட்டிகள் ஒட்டியுள்ளார்.

இதன்பேரில், சென்னிமலை போலீசார் தேவராஜ் மீது வழக்குப்பதிவு செய்தனர். அந்தியூர் பர்கூர் சாலையில் தேர்தல் நிலைக்குழுவினர் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேர் தகராறில் ஈடுபட்டனர். இதன்பேரில், தகராறில் ஈடுபட்ட அ.புதுப்பாளையத்தை நாகராஜ் மற்றும் அந்தியூரை சேர்ந்த செந்தில்குமார் ஆகிய 2 பேர் மீது அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

The post மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: