பாஜவுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
கெஜ்ரிவாலை நீங்கள் சிறையில் அடைத்தாலும், டெல்லி மக்கள் மீது அவர் வைத்துள்ள அன்பையும், அவர்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையையும் சிறைபிடிக்க முடியாது. சிறையில் அவரை முடக்கினாலும், அவரது பணிகளை உங்களால் முடக்க முடியாது. இவ்வாறு கூறிய அடிசி பின்னர் கெஜ்ரிவாலின் உத்தரவு கடிதத்தை வாசித்து காட்டினார். அதில் கெஜ்ரிவால், ‘டெல்லியின் சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் பிரச்னை இருப்பதாக அறிகிறேன். அதைப் பற்றி கவலை கொள்கிறேன். நான் சிறையில் இருக்கின்ற காரணத்தால் மக்கள் எந்த பிரச்னையையும் சந்திக்கக் கூடாது. இப்போது கோடைக்காலம் வந்து விட்டது. எனவே அனைத்து பகுதிகளிலும் பற்றாக்குறை இல்லாமல் குடிநீர் விநியோகிக்கப்பட வேண்டும். மக்கள் எந்த சங்கடத்தையும் சந்திக்காத வகையில் தலைமை செயலாளர் மற்றும் பிற அதிகாரிகள் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். மக்கள் அவர்களின் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வுகளை பெற வேண்டும். தேவைப்பட்டால் ஆளுநரிடமும் உதவி கேளுங்கள். அவர் நிச்சயம் உதவுவார்’ என கூறி உள்ளார். ஊழல் வழக்கில் கைதானதால் கெஜ்ரிவால் முதல்வராக நீடிக்க தகுதியில்லை, அவர் உடனே பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென பாஜ கட்சியினர் வலியுறுத்தி வரும் நிலையில், கெஜ்ரிவால் தொடர்ந்து முதல்வராக நீடிப்பார் என ஆம் ஆத்மி கூறி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை விசாரணையில் இருந்தபடி தனது முதல் உத்தரவை கெஜ்ரிவால் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post பதவி விலகக் கோரும் பாஜவுக்கு பதிலடி அமலாக்கத்துறை விசாரணைக்கு நடுவே முதல் உத்தரவு பிறப்பித்தார் கெஜ்ரிவால்: டெல்லி முதல்வராக பணியை தொடர்கிறார் appeared first on Dinakaran.