அவிநாசி, மார்ச் 24: அவிநாசியில் போதை மாத்திரை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நேற்று டிஎஸ்பி சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், அவிநாசி வட்டார மருந்தக உரிமையாளர்சங்க தலைவர் பழனிசாமி, சங்க செயலாளர் ஈசுவரன் மற்றும் அவிநாசி, சேவூர், குன்னத்தூர், பெருமாநல்லூர் ஆகிய ஊர்களில் உள்ள மருந்தகங்களின் உரிமையாளர்கள் மற்றும் வேலை ஆட்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், மருந்தகங்களின் உரிமையாளர்கள் மற்றும் வேலை ஆட்களிடம் போதை மாத்திரை விற்பனை செய்யக்கூடாது என்று டிஎஸ்பி அறிவுறுத்தினார்.
The post போதை மாத்திரை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.