திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்

 

ஈரோடு, மார்ச் 24: திமுக அரசின் சாதனைகளை விளக்கிக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு அமைச்சர் முத்துசாமி அறிவுறுத்தினார். ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி செயல் வீரர்கள் கூட்டம் ஈரோடு அருகே உள்ள மேட்டுக்கடை பகுதியில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு ஈரோடு எம்பி கணேசமூர்த்தி தலைமை தாங்கினார்.

வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலை வகித்து, ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாசை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது: கூட்டணி கட்சி நிர்வாகிகள் கடுமையாக உழைத்ததன் பயனாக ஈரோடு இடைத்தேர்தலில் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற்றோம். நீங்கள் அனைவரும் ஒவ்வொரு வீடாக சென்று வாக்காளர்களை நேரடியாக சந்தியுங்கள். திமுக அரசின் சாதனைகளை விளக்கிக் கூறி வாக்குகள் சேகரித்தாலே நாம் அதிகப்படியாக வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

மகளிர் உரிமைத்தொகை, கல்லூரி மாணவிகளுக்கு உதவித்தொகை, மகளிர்க்கு இலவச பஸ் பயணம் என பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார். இதை வாக்காளர்களிடம் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். இந்த தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிகப்படியாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற அனைத்து நிர்வாகிகளும் கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: