இல்லையேல் நாங்கள் ஆளுநருக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும்” என கடுமையாக எச்சரித்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் கடுமையான எச்சரிக்கையை தொடர்ந்து பொன்முடி பதவியேற்பிற்கு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்துள்ளார். ஒன்றிய உள்துறை அமைச்சகமும், ஒன்றிய அரசு தலைமபிறகு வழக்கறிஞரும் அறிவுறுத்தியதை தொடர்ந்து ஆளுநர் ரவி பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். நான்காவது முறையாக உச்ச நீதிமன்றத்தின் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. பொன்முடிக்கு பதவியேற்பு நடத்த வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என்ற நிலையில், பதவியேற்பு நடத்த ஆளுநர் முடிவு எடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பொன்முடி அமைச்சராக இன்று மாலை 3.30 மணிக்கு பதவியேற்கிறார். ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடக்கிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ள ஆளுநர் மாளிகை, பொன்முடிக்கு மீண்டும் உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
The post மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி: உச்சநீதிமன்ற கண்டனத்திற்கு பணிந்து பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு!! appeared first on Dinakaran.