கெஜ்ரிவாலுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த சில மணி நேரங்களிலேயே அமலாக்கத்துறை அவரின் வீட்டிற்கு சென்றுள்ளது என்றும் சோதனையில் ஒரு பைசா கூட அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் அமலாக்கத்துறை தன்னாட்சி அமைப்பு இல்லை என விமர்சித்த அதிஷி, பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் பாஜகவின் ஆயுதமாக செயல்படுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்வார் என்றும் சிறையில் இருந்து அவர் நிர்வாகம் செய்வார் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் டெல்லி பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்த உள்ளதாகவும் அமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார்.
The post டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்வார்.. சிறையில் இருந்து அவர் நிர்வாகம் செய்வார் :அமைச்சர் அதிஷி காட்டம் appeared first on Dinakaran.