பாலியல் புகார் வழக்கில் கைதான ரேவண்ணாவுக்கு 7 நாள் நீதிமன்ற காவல்: பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைப்பு

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் கர்நாடக மாநில ஹாசன் தொகுதி மஜத எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பலாத்காரம் செய்த ஆபாச வீடியோக்கள் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரையும் அவரது தந்தையும் ஹொலெநரசிபுரா தொகுதி எம்.எல்.ஏவுமான ரேவண்ணா ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் வழக்கை விசாரித்து வருகின்றனர். ரேவண்ணா வீட்டு பணிப்பெண் கடத்தப்பட்டதாக அந்த பெண்ணின் மகன் புகார் அளித்தார். இதையடுத்து, ரேவண்ணா கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்டார். நேற்று ஏசிஎம்எம் நீதிமன்றத்தில் நீதிபதி ரவீந்திர குமார் கட்டிமணி முன் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். ரேவண்ணாவை மே 14 வரை ஒரு வாரம் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ரேவண்ணா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

The post பாலியல் புகார் வழக்கில் கைதான ரேவண்ணாவுக்கு 7 நாள் நீதிமன்ற காவல்: பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: