இலவச கண் சிகிச்சை முகாம்

திருச்செங்கோடு, மார்ச் 22: திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரி வளாகத்தில், இலவச கண் சிகிச்சை முகாமை, கேஎஸ்ஆர் கல்லூரிகள் மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை நடத்தின. முகாமை கேஎஸ்ஆர் கல்லூரிகளின் தலைவர் சீனிவாசன், முதன்மை நிர்வாக அதிகாரி அகிலா முத்துராமலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இயக்குனர் (நிர்வாகம்) பேராசிரியர் மோகன் தலைமை வகித்தார். கல்லூரி மாணவ, மாணவிகள் பேராசிரியர்கள், பஸ் டிரைவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர் சாம்பவி கூறுகையில், ‘நீண்ட நேரம் டிவி கணினி ஆகியவற்றை பார்ப்பதும், செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதும் கண்களுக்கு ஊறு விளைவிக்கும்,’ என்றார். இதில் சுமார் 300 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை என்எஸ்எஸ் அலுவலர் குப்புசாமி, யுவராஜ், வீரமணி ஆகியோர் செய்திருந்தனர்.

The post இலவச கண் சிகிச்சை முகாம் appeared first on Dinakaran.

Related Stories: