மாவட்ட நிர்வாகம் சார்பில் ‘100 சதவீதம் வாக்களிப்போம்’ உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி

தென்தாமரைகுளம், மார்ச் 21 : சாமிதோப்பு ஊராட்சியில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும், ரங்கோலி நிகழ்ச்சியும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சாமித்தோப்பு ஊராட்சியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மகளிர் திட்ட இயக்குனர் பீபீ ஜான், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சாந்தி, வட்டாட்சியர்கள் சுப்பிரமணியம், கோலப்பன் வினோத், கண்ணன், சுவாமிதோப்பு ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன், உதவி திட்ட அலுவலர் ஞான வளர்மதி, வட்டார இயக்க மேலாளர் சந்திரா, வட்டார ஒருங்கிணைப்பாளர் ஏசு அனுசுயாபாய், ஊராட்சி துணைத்தலைவர் ஜெய பார்வதி மற்றும் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு நிர்வாகிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாவட்ட நிர்வாகம் சார்பில் ‘100 சதவீதம் வாக்களிப்போம்’ உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: