நாடாளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு முகாம்

திருச்செங்கோடு, மார்ச் 21: திருச்செங்கோடு நகராட்சி சார்பில், நாடாளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திருச்செங்கோடு நகராட்சி சார்பில், தேர்தல் விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. நகராட்சி சுகாதார அதிகாரி வெங்கடாசலம் தலைமையில் நடந்த முகாமில், திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் முன்பாக, பொதுமக்களிடையே தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 100 சதவீத வாக்குப்பதிவு, பணம் பெறாமல் வாக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நமது இலக்கு 100 சதவீத வாக்குப்பதிவு, வாக்கு அளிப்பது நம் அனைவரின் ஜனநாயக கடமை என்றும் எனது வாக்கு எனது உரிமை, எனது வாக்கு விற்பனைக்கு அல்ல என்பன போன்ற விழிப்புணர்வு வாசகங்களை பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர். முகாமில் நகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post நாடாளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: