இதையடுத்து சுமார் 250 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று அதிகாலை தூத்துக்குடி கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த குளச்சல் பகுதியை சேர்ந்த 5 விசைப்படகுகளையும், கேரளாவை சேர்ந்த ஒரு படகையும், 86 மீனவர்களையும் தூத்துக்குடி மீனவர்கள் சிறைபிடித்து மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். நடுக்கடலில் இரு தரப்பு மீனவர்களுக்கு இடையே நடந்த மோதலில் 3 மீனவர்கள் காயமடைந்தனர். மீன்துறை அதிகாரிகள், தூத்துக்குடி மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கேரள மற்றும் குளச்சல் பகுதி மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post தூத்துக்குடி கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த 86 மீனவர்கள், 6 படகுகள் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.