* ஐபிஎல் 17வது சீசன் தொடக்க லீக் ஆட்டம் சென்னையில் மார்ச் 22ல் நடக்க உள்ளது. சிஎஸ்கே – ஆர்சிபி மோதும் அந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று காலை 9.30 மணிக்கு ஆன்லைனில் தொடங்கியது. நேரடி விற்பனை இல்லை என்பதால் சேப்பாக்கம் அரங்க வளாகம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. பே.டி.எம் மற்றும் www.insider.in என இணைய சேவை மூலமாக மட்டுமே விற்பனை நடைபெற்றது. விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் இந்த இணையதளங்கள் முடங்கியதாக ரசிகர்கள் குற்றம்சாட்டினர். 15 நிமிடங்களில் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன.
* இந்திய வேகம் ஜெய்தேவ் உனத்கட் கவுன்டி சாம்பியன்ஷிப்பில் சசெக்ஸ் அணிக்காக மீண்டும் விளையாட உள்ளார்.
* கணுக்கால் காயத்தால் ஓய்வெடுத்து வந்த அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் லீக் ஆட்டத்தில் (மார்ச் 24, குஜராத் டைட்டன்ஸ்) விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.
The post சில்லிபாயின்ட்.. appeared first on Dinakaran.