நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: சுந்தர் எம்எல்ஏ அறிவிப்பு

மதுராந்தகம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிவிப்பு: நாடாளுமன்ற தேர்தல் பணிகள் சிறப்பான முறையில் நடைபெறுவதற்காக காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், ஆலோசனை கூட்டம் இன்று காலை 10:30 மணி அளவில் காஞ்சிபுரம் பவள விழா மாளிகையில் சுந்தர் எம்எல்ஏ தலைமையில் நடைபெறுகிறது.

இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் உள்ள திமுக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் நீதி மய்யம், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, திராவிட இயக்க தமிழர் பேரவை உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் அனைவரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: சுந்தர் எம்எல்ஏ அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: