இந்த சூழலில் மக்களவை தேர்தல்: அதிமுக கூட்டணியில் பா.ம.க., தேமுதிக இணைவது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மறைமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், மார்ச் 20-ம் தேதி அதிமுக, கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. அதிமுக பாமக கேட்ட 7 மக்களவை தொகுதி மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி தர முன்வந்ததாக கூறப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூர் உட்பட 6 தொகுதிகள் வட தமிழ்நாட்டிலும், தென் மாவட்டத்தில் ஒரு தொகுதியும் பா.ம.க.வுக்கு ஒதுக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. பாமகவுக்கு ராஜ்யசபா எம்.பி. வழங்க அதிமுகவில் எதிர்ப்பு எழுந்தாலும் கூட்டணி முக்கியத்துவம் கருதி எடப்பாடி, பாமக கேட்ட சீட்டை தர முடிவு எடுத்துள்ளார்.
அதே நேரம், அதிமுக – தேமுதிக இடையே கூட்டணி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. தேமுதிக ஒரு மாநிலங்களவை தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவதே இந்த இழுபறிக்கு காரணமாக சொல்லப்படுகிறது. மேலும் தேமுதிக கேட்ட 4 மக்களவை தொகுதியை ஒதுக்க அதிமுக இசைவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தேமுதிக சார்பில் போட்டியிட 19 மற்றும் 20ஆம் தேதிகளில் விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என்றும், மனுக்களை பூர்த்தி செய்து 20ஆம் தேதி மாலைக்குள் வழங்க வேண்டும் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
The post அதிமுகவின் மெகா கூட்டணி கனவு நிறைவேறுகிறதா?.. மார்ச் 20ல் பாமக, தேமுதிகவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்!! appeared first on Dinakaran.